Friday, July 3, 2020

பூவண்ணம் போல நெஞ்சம் Poo vannam pola nenjam

மனதை கவர்ந்த மலர்கள் (3)

இசை வடிவமைப்பாளர் சலில் சொளத்ரி,

1923 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் பிறந்த சலில் சொளத்ரி, இளமை பருவத்தில் அசாம் தேயிலை தோட்டங்களில், கிராமிய பாடல்களோடு வாழ்ந்த இவர், கவிஞர், எழுத்தாளர், இசையமைப்பாளர் என அவதாரமெடுத்தார். தனது படைப்புகளில் முற்போக்கு சிந்தனைகளை விதைத்தார். தேச சுதந்திர உணர்வையும், பாட்டாளி மக்களின் எழுச்சியையும் மையமாக வைத்து படைப்புகளை உருவாக்கினார்.

பாரம்பரிய இசையுடன், மேற்கத்திய இசையை கலந்து தனக்கான இசை வடிவை உருவாக்கினார். மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் திரை இசையமைப்பாளராக பணியாற்றிய சொளத்ரி, 1979 ஆம் ஆண்டு, தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய “அழியாத கோலங்கள்” படத்தில் கங்கை அமரன் எழுதிய பாடலுக்கு இசையமைத்தார். ஜெயச்சந்திரன் – சிசிலா பாடிய பாடலில், பிரதாப் போத்தன்- ஷோபா ஆகியோர் நடித்தனர். காலவெல்லத்தில் கரையாமல் நிற்கிறது அந்த ராகம்.

No comments:

Post a Comment