Wednesday, July 8, 2020

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு-தமிழ் பாடல் ரசிகன்


மனம் கவர்ந்த மலர்கள் -6
பொதுவுடமை பாடிய கவிஞர்கள்
1964 ஆம் ஆண்டு படகோட்டி திரைப்படத்தில் “மண் குடிசை வாசலென்றால், தென்றல் வர மறுத்திடமா” என்று பாடல் எழுதிய கவிஞர் வாலி அவர்கள்,  அடுத்த ஆண்டு (1965) ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை”  என்றும் முற்போக்கு கருத்துக்களை விதைத்தார்.
1988 ஆம் ஆண்டு, உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில், “அக்கம் பக்கம் பாரடா சின்னராசா,” “உன்னால் முடியும் தம்பி, தம்பி” நஞ்சை உண்டு புஞ்சை உண்டு” போன்ற பாடல்களின் மூலம் முற்போக்கு கருத்துக்களை பரப்பியவர் புலவர் புலமைப்பித்தன். தொடர்ந்து முற்போக்கு கருத்தியல்கள் திரைப்படங்களில் தொடர வேண்டும் என்பது, திரை ரசிகர்கள் பலரது விருப்பமாக உள்ளது.    

No comments:

Post a Comment