Wednesday, July 8, 2020

ENNAI MARANTHATHEYN THENTRALEY PS @ KALANGHKARAI VILAKKAM FULL VIDEO


மனம் கவர்ந்த மலர்கள் – 5
சற்றேரக்குறைய 1380 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிமா நகரத்தை மகேந்திர வர்மரும், அவருக்கு பின் அவரின் மகன் நரசிம்மவர்மரும் ஆட்சி செய்கின்றனர்.
இந்த காலத்தில் அப்பர், திருஞானசம்பந்தர், சிறுதொண்டர் போன்ற  நாயன்மார்கள்  தமிழ் இலக்கியங்களை செம்மைப்படுத்தினர். மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டு,  சிற்பம், ஓவியம், அரசியல், கடல்வழி வணிகம் போன்ற துறைகளில், முத்தாய்ப்பு நிகழ்த்தப்பட்டது.  
சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி மற்றும் நாகநந்தியின் பகையும், வாதாபி படையெடுப்பும், தளபதி பரஞ்சோதியின் வல்லமையும் குறித்து,  கல்கியின் கைவண்ணத்தில் அறிகிறோம்.
இந்த காலச்சூழலில், மாமல்லபுர பாறை கற்களை, பவழ சிற்பங்களாக வடித்த ஆயன சிற்பியும், சிற்ப கலைக்கூடத்தில் வளர்ந்த அவரின் மகள் சிவகாமியும் கூட நினைவு கூறத்தக்கவர்கள். இவர்களை கற்பனை திரையில் வடித்தவர் கல்கி.
காட்சி திரையில் வடித்தவர்கள்..
இயக்குனர் கே.சங்கர், பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம், மெல்லிசை மன்னர் எம்,.எஸ்.விஸ்வநாதன், குரலிசை அரசி பி.சுசிலா, சிவகாமியாக சரோஜாதேவி, சிவகாமியின் செல்வராக எம்.ஜி.ஆர்.
இதுவரையிலும், இனிமேலும் இத்தகைய காட்சி அமைப்புகளை இவர்களை தவிர, வேற யாரும் தரமுடியாது என்பதே திண்ணம். 

No comments:

Post a Comment