Sunday, June 23, 2013


நானும் ஒரு மனிதனாக பிறந்ததற்கு வேதனைப்படுகிறேன்.


                    
உத்தர்காண்ட் மாநிலத்தில் மனதை உறையவைக்கும் பேரழிவு  

நடந்தள்ளது.இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள கேதார்நாத்

பத்திரிநாத் போன்ற பகுதிகளுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநில 

மக்கள் ஆன்மிக சுற்றுலா சென்றள்ளனர். 

இந்த அன்மிக சுற்றுலாவில் ஆண்டவனின் அருள் கிடைத்ததோ 

இல்லையோ, கொடூர மனிதர்களின் ஒட்டுமொத்த உருவத்தையும் 

பார்த்தார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணம். 10 ஆயிரத்திற்கும் 

அதிகமானோர் கானாமல் போயினர். வழி தடைபட்டு 

வெளியேறமுடியாமல் சிக்கிக் கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில்.  

எஞ்சிய மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவரவர் வீடு திரும்பி

கதறி பதறிடும் உற்றார் உறவினருடன் மீண்டும் சந்தித்து

நிம்மதியான வாழ்வைப் பெற வேண்டுமே என்பதே நமது 

மனஓட்டமாக உள்ளது.
            


தமிழ்நாட்டு  பெண்மணி ஒருவர் சாப்பிட உணவு கிடைக்காமல் 

பசியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியும் வெளியாகியது. இந்த 

சூழலில், காட்டு மிருகங்களையும் மிஞ்சும் கேவலமான 

மக்களையும் அங்கு பார்க்க முடிகிறது.  அங்கே தத்தளிக்கும் 

மக்கள் தண்ணீர்த் தாகத்துடனும், கடும் பசியுடனும், உயிர் மரணப் 

போராட்டம் நடத்துகின்றனர்.


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தற்காலிகக் கடை நடத்தும் சிலர், ,
பரோட்டா 250 ரூபாய், ஒரு பாட்டில் தண்ணீர்  200 ரூபாய், ஒரு 

சிறிய சிப்ஸ் பாக்கெட்  100 ரூபாய், ஒரு சிறிய சப்பாத்தி 150 

ரூபாய், ஒரு சிறிய ரொட்டி (சிலைஸ்)  100 ரூபாய், ஒரு சிறிய 

கப் சாதம்  50 ரூபாய் என்று விற்றார்களே, பணம் 

இல்லையென்றால் அணிந்திருக்கும் தங்க நகையை கொடு என்று 

பிடுங்கி திண்றார்களே, கேவலம் இந்த மனித கூட்டத்திடையே 

நானும் ஒரு மனிதனாக பிறந்ததற்கு வேதனைப்படுகிறேன். 

                   

பக்தி வியாபாரம் என்ற பெயரால் பிணங்களைத் கொத்தித் தின்னும் 

கழுகுகளை விட கேவலமாக உயிரோடு உள்ளவர்களை 

குத்திக்கிழிக்கும் பிணந்திண்ணிகளை என்ன செய்யலாம். பாரத 

கலாச்சாரத்தையும், லார்டு ஷிவாவையும் பெருமைபட பேசும் 

வெளிநாட்டினர் முகத்தில் இனி நாம் எப்படி விழிப்பது. ஆன்மிகம், 

பக்தி சுற்றுலா என்ற பெயரில் அப்பாவி மக்களை 

பாதுகாப்பில்லாமல் அங்கே கூட்டிச் செல்லும் சிவனடியார்களை சீ 

என்று சொல்லுபவர்களை எப்படி தடுப்பது.

No comments:

Post a Comment