Sunday, June 23, 2013

  • உத்தர்காண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டம், ரிஷிகேஷ் நகராட்சியில் கந்கை நதிக்கரையில் அமைக்கப்பட்ட 30 அடி உயர சிவன் சிலை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.


                    
          இமாச்சலப் பிரதேசம்,  உத்தரகாண்ட்,  ஜம்மு-காஷ்மீர் போன்ற  மாநிலங்களில் எந்த நேரமும் நிலச்சரிவு ,  வெள்ளப்பெருக்கு போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா ஆறும் பாகீரதி ஆறும் இணைந்து கங்கை நதியாக மாறி ஓடுகிறது. 14 ஆறுகள் குறுக்கும்நெடுக்குமாக ஓடுகின்றன. 
                    
           ஆற்றின் கரை ஒரங்களில் 220  மின்சக்தித் திட்டங்கள் மற்றும் சுரங்கத் தொழில்கள் நடக்கின்றன. இந்தத் திட்டங்களுக்காக சில ஆறுகளை சுரங்க வழிகளில்  திசை திருப்பிக் கொண்டுசெல்கிறார்கள். ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதெல்லாம் இயற்கைக்கு விரோதமானது. இதுமாதிரியான திட்டங்களால்தான் இயற்கை சீற்றம் மக்களைத் தாக்குகிறது. 

                                                                              
                    
         இந்த முறை, பருவ மழை கொஞ்சம் முன்கூட்டியே வந்துவிட்டது. 2013 ஜூன் மாதம் 17 ந்தேதி முதல் இங்கு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் பலத்த மழையில் அணைகள் நிரம்பி வழிகிறது. நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

      நூற்றுக்கணக்கானோர் உயிரிப்பு. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வழியில்லாமல் தீவு போல் மாறிபோன பகுதிகளில் சிக்கியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மக்கள் பலர் ஆன்மிக சுற்றுலா சென்று சிக்கியுள்ளனர்.   5 முறை பாரதிய ஜனதா கட்சியும், 2 முறை காங்கிரஸ் கட்சியும் ஆட்சி நடத்தும் இந்த மாநிலத்தில் தேவையான முன்னேற்பாடுகளை செய்யாமல்விட்டதுதான் பயங்கரப் பாதிப்புகள் ஏற்படக் காரணம். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் பகுகுணா முதல்வராக உள்ளார்.  

         1991 ம் ஆண்டு உத்தரகாசி ஏரியாவில் நிலநடுக்கம், 1999 ம் ஆண்டு சமோலி ஏரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகியவை இங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த பயத்தில் கட்டுமான பணிகளில் எச்சரிக்கையாக இருந்த மக்கள் மீண்டும் பயம் தெளிந்து இயற்கைக்கு விரோதமாக கட்டுமான பணிகளை துவக்கினர். இது போன்ற காரணங்களே இந்த பேரழிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment