Monday, June 17, 2013

சகஜானந்தர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில், 1890ஜன. 27 ல்  அண்ணாமலை - அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர்  முனுசாமி. இவரே பின்பு சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர்.

சிதம்பரத்தில் நந்தனார் கல்விக்கழகம் 1916 ல் துவக்கப்பட்டது. 20.05.1917 ல் முதல் வகுப்பு நடத்தப்பட்டது.

1927 ல் உயர்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது.

1939 ல் நந்தனார் கல்வி கழகத்தை அரசே நடத்த வேண்டும் என சகஜானந்தர் கோரிக்கை வைத்தார்.

1940 ல் அண்ணாமலை பல்கலை கழகம் சகஜானந்தரை தமிழறிஞர் என பட்டம் கொடுத்து கௌரவம் செய்தது.

1926 முதல் 1932 வரை சென்னை மாகான சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.

1936 ல் இருந்து 1959 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் தனி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

தேவஸ்தான கமிட்டிகளில் தாழ்த்தப்பட்டவர்களையும் நியமிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் குரலெழுப்பினார். (சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்பு தொகுதி எண் 7, 1947 அக்டோபர் 29 பக்கம் 61,62)

1934 ல் சகஜானந்தர் சிதம்பரம் ஆலய நுழைவு போராட்டத்தை துவக்கினார்.

2.6. 1947 ல் ஆலய நுழைவு போராட்டத்தில் வெற்றி பெற்றார்.

• 1938 ல் கொண்டு வரப்பட்ட மலபார் கோயில் நுழைவு மசோதாவில் கலந்து கொண்டு பேசும் போது, தாழ்த்தப் பட்டவர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்று எந்த வேதமும் சாஸ்திரமும் சொல்லவில்லை, சில மடாதிபதிகள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். மற்ற சமூகத்தவர்களை விட தாழ்த்தப் பட்டவர்களுக்கே கோயிலுக்குள் நுழையும் உரிமை அதிகமாக இருக்கிறது. கோயிலில் சுவாமி இருக்கிறது என்றும் எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. எங்களை உள்ளே போக விடாமல் வைத்திருப்பதால் வாஸ்தவத்தில் இந்து மதத்தில் ஏன் மக்களாகப் பிறந்தோம் என்று துக்கம் அடைந்து வருகிறோம். சீக்கிரம் இதைச் சட்டமாகச் செய்து நடைமுறையில் வந்தால் அது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று பேசினார்.
தஞ்சை விவசாயிகள் கொடூரமாக எரிக்கப் பட்டபோது (1968-69) அதற்கு ஈ.வெ.ரா எப்படி எதிர்வினை ஆற்றினார் என்று நமக்கு தெரியும். அவர் ஒரு பிற்படுத்தப் பட்டவரின் மனநிலையிலேயே அப்படி பேசியிருக்கிறார். அதாவது கொன்றவர்களுக்கு ஆதரவாக பேசினார். ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்டவர் இல்லையே? ஆனால் இதே பிரச்சினைக்காக 1951 ல் சுவாமி சகஜானந்தர் சட்ட மன்றத்திலேயே தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
 இன்னும் கூலி கொடுக்கும் விஷயத்தில் தஞ்சை ஜில்லாவில் பெரிய கலகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் கம்யூனிஸ்டுகள் தான் செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் கம்யூனிஸ்டுகள் கலகம் செய்யவில்லை. பயிரிட்டு விட்டு சாப்பாட்டிற்குக் கூலி சரியாகக் கிடைக்காத காரணத்தால் தான் விவசாயிகள் மிராசுதார்களிடத்தில் சண்டை போடுகிறார்கள்.
ஆகையால் கூலி நிர்ணயம் செய்து ஒரு சட்டம் இயற்றுவது தான் நல்லது. இன்னும் பெரும் நிலக்காரர்களிடம் உள்ள நிலத்தை எடுத்துப் பங்கிட்டுக் கொடுக்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளுகிறேன். அதோடு விவசாயிகளுக்கென்று ஒரு சம்பள போர்டை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்IX, 1951, மார்ச் 2, பக் 390).


   
 

No comments:

Post a Comment